சனிக்கிழமை காலை 7:50க்கு காச்சிகூடா ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததுமே ’சார் ஆட்டோ’ ‘பைய்யா அட்டோன்’னு
நாங்கைந்து பேர் வந்து எங்களை சூழ்ந்து கொண்டனர். அவர்களை கடந்து கொஞ்ச தூரம் போனால் பைய்யா ரூம் ஒன்லி சிக்ஸ்
ஹண்ட்ரட். பக்கத்துலதான் இருக்கு வாங்க போகலாம்னு சொல்லி ஒருத்தர் எங்களோடவே நடக்க ஆரம்பிச்சிட்டார். இல்ல நாங்க
ஏற்கனவே ரூம் ஆன்லைன்ல புக் பண்ணியாச்சுன்னு சொன்னாலும் ஹும் கேக்கல. காசா பணமா எவ்வளவு தூரம் வரியோ வானு
கண்டுக்காம நாங்க கூகுல் ஆண்டி சொல்லுற டைரெக்ஷன்ல நடக்க ஆரம்பிச்சிட்டோம்.
காச்சிகூடா ஸ்டேஷனில் இருந்து ஒரு பத்து நிமிஷம் நடந்திருப்போம். நாங்கள் புக் செய்திருந்த OYO Flagship 76915 ஹோட்டலை
அடைந்ததும் நேராக ரிசப்ஷன் பகுதியில் இருப்பவரிடம் சென்று ’ரூம் புக் செய்திருந்தோம் எர்லி-செக்கினோட’னு சொன்னதும் எங்களுக்கு
எர்லி -செக்கின் பத்தி எந்த தகவலும் வரலையே சார் சொல்லி இருந்தார். அது
மட்டும் இல்லாம இப்போ எந்த ரூமும் உங்களுக்கு ஒதுக்க காலியாக இல்ல. யாராவது செக்-அவுட் செய்தால் மட்டுமே உங்களுக்கு
ரூம் தர முடியும்னு அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாக தம்பி உடனே ரூம் எர்லி செக்கின் இருக்கிறதா பத்து முறை கேட்டு
கன்ஃபார்ம் செய்த பிறகுதான் ஓயோ எக்சிகிட்டிவ் மூலம் ரூம் புக் செய்திருந்தோம்னு சொன்னதுமே...
கொஞ்ச நேரம் உட்காருங்கள் சார். ரூம் காலியானதுமே கொடுக்கிறோம்னு ரிசப்ஷனிஸ்ட் சொல்லி இருந்தார்.
ரூமுக்காக ஆயிரம் ரூபாய் ஏற்கனவே பே பண்ணியாச்சு. அந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே ரிசப்ஷன் பகுதியில் போடப்பட்டிருந்த
சோபாவில் வந்து உட்கார்ந்தோம் இல்லாட்டி போங்கடா டேய் நீங்களும் உங்க ஹோட்டலும்னு வெளியே வந்து நல்லா இருக்கோ
மோசமா இருக்கோ குளிச்சிட்டு கிளம்ப ஊருல லார்ஜுக்கா பஞ்சம்...னு மைண்ட் வாயிஸ் வசனம் எல்லாம் பேசிகிட்டாலும் இனி ஓயோ
மாதிரியான ஸ்டாண்டடான ஹோட்டல்ஸ்ல மட்டுமே தங்கனும்னு ஒரு சில அனுபவங்கள் இதற்கு முன்பு எங்களுக்கு
ஏற்பட்டிருந்ததால் அமைதியாக கொஞ்ச நேரம் மௌன விரதத்துல இறங்கிட்டேன்.
பெரும்பாலும் நீண்ட தூரம் அல்லது இரவு நேர பயணம் செய்து வெளியூர் செல்பவர்கள் ஃப்ரெஷப் ஆக காலையில் ரூம் எடுக்க
வேண்டிய சூழல் இருக்கும். அதுவும் பெண்கள் குழந்தைகள் இருந்தால்... எப்படியும் அவர்கள் ஹோட்டலைத்தான் தேடி போய் ஆகணும்.
மார்னிங் ஒரு ஏழு மணி அளவுல செக்-இன் ஆகுற மாதிரி ஹோட்டல்ஸ் நேரம் ஃபிக்ஸ் பண்ணுனா நல்லாதான் இருக்கும் ஆனா
ஹோட்டல்ஸ் நடத்துறவங்க லாபம் பார்க்க முடியாத ஒரே காரணத்துக்காக யாரும் செக்-இன் நேரம் மாத்த ரெடியா இல்லைனு
நினைக்கிறேன்...
கொஞ்ச நேரத்துல ரிசப்ஷனிஸ்ட் எங்களை அழைத்து எண்ட்ரி போட்டுக்க சொன்னார். தம்பியோட பேருல நாங்க ரூம் புக்
செய்திருந்ததால அவனோட ஆதார் கார்ட் மட்டும் வாங்கி ஸ்கான் செய்து கொண்டு ஆதார் கார்ட் மற்றும் எங்களது ரூமுக்கான
சாவியைக் கொடுத்து ரூம் நெம்பரும் எந்த ஃப்லோரும் சொல்லியிருந்தார்.
ரிசப்ஷன் பகுதியை கடந்து கொஞ்சம் உள்ளே போனால் இடது புறம் இருந்த லிஃப்ட்டில் ஏறி நாங்காவது ஃப்லோரில் லிஃப்ட்டில் இருந்து
வெளியே வந்து எங்களுக்கான ரூமில் நுழையும்போது மணி எட்டரை...
***
நல்ல பெரிய ரூம்தான். தாராலமா மூனு பேர் தூங்குற அளவு பெரிய பெட்...
டீலக்ஸ் ரூம் அப்படீங்கறதால இண்டிரியரும் நல்லா இருந்தது.
மொதல்ல நா பாத்ரூம் போய் குளிக்க ஆரம்பிச்சேன். அப்போ ஆரம்பிச்சது புது பிரச்சனை..
பாத்ரூம்ல என்னஎன்ன எங்க இருக்குன்னு தம்பி காட்டிட்டு போய் இருந்தான்.
அந்த சமயம் பார்த்து எவ நெனப்புல பகல் கனவு கண்டிட்டிருந்திருப்பேனோ தெரியல... எல்லாம் தெரிஞ்சவனாட்டும் தம்பி
சொல்லுறத காதுல வாங்கிக்காம அவன் சொல்லுறதுக்கெல்லாம் சரி சரின்னு சொல்லி கதவ மூடி குளிக்க பக்கெட்ல தண்ணிய
பிடிப்போம்னு கொழாவ திருப்புனா தண்ணியே வரக்காணோம்...
என்ன கொடுமை இதுன்னு நினைச்சுகிட்டிருக்க கொழாவுக்கு மேல ரெண்டு பக்கம் திருப்புறமாதிரி ஒரு வால்வ் இருந்தது. அதைய பிடிச்சு
ஒரு பக்கம் திருப்புனா சுடு தண்ணீரும் இன்னொரு பக்கம் திருப்புனா பச்சை தண்ணீரும் பக்கெட்ல ஊத்துது அதோட
அந்த கனெக்ஷன்லையே ஷவருக்கும் லிங் வெச்சிருந்தாங்கலா திடீரென தண்ணீ தல மேல பூஸ்ஸுனு ஊத்துது.
ஒரு செக்கண்ட் ஒன்னுமே புரியல. இஷ்டத்துக்கு நா அப்படி இப்படி வால்வ திருப்பி கொஞ்ச நேரம் தடுமாறி பாதி குளியல்
முடிச்சதுக்கு அப்பறம்தான் தெளிவு கிடைச்சது. ஹும் வாழ்க்கையும் அப்படிதான் போல...
இப்படிதான் தாய்லாண்ட் சென்றிருந்தபோது பட்டாயாவில் நாங்கள் தங்கி இருந்த கோல்டன் பீச் ஹோட்டல் த்ரி ஸ்டாரோ இல்ல ஃபோர்
ஸ்டார் ஆனு எனக்கு சரியா ஞாபகம் இல்ல. குளிக்க பாத்ரும்ல பக்கெட்டுக்கு பதிலா பாத் டப் இருந்தது மட்டும் நல்லா ஞாபகம்
இருக்கு...
மொதநாள் குளிக்க போன சமயம் டப் பாத் எடுக்க தொட்டியில நா படுத்துகிட்டு எப்படி தன்னி நிரப்புரதுனு தெரியாம ஒரு கட்டத்துக்கு
மேல பொறுமைய இழந்து பாத் டப் ல நின்னு குளிச்ச சம்பவம் எல்லாம் எங்க போய் சொல்ல...
அடுத்தநாள் எப்படி பாத் டப்ல குளிக்கணும்னு கத்துகிட்டு ஒன்னரை அடி உயரம் கொண்ட அந்த தொட்டியில் படுத்துகிட்டு
உடம்பு தாங்குற அளவு மிதமான சுடு தண்ணீ நிரப்பி குளிச்சதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்...
ஒருவழியா குளிச்சு நா வெளிய வர தம்பி பாத்ரூம்ல நுழைஞ்சான்.
பத்து நிமிஷத்துல உள்ள போனவன் வெளியே வந்து ரெடி ஆகுற கேப்புல
அம்மா உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் ஒன்னு பைய்யில வெச்சிருந்தத பார்த்ததுமே அன்றைய தின ப்ரேக்ஃபாஸ்ட் சிப்ஸ் பேக்கட் பிரிச்சு சாப்பிட ஆரம்பிச்சிட்டேன்...
சிப்ஸ் வேறு நல்ல காரமா ருசியா வேறு இருந்ததா தம்பிக்கு எடுத்து வைக்கனுமேனு தோனினாலும் வைத்துக்குள்ள நா பாட்டுக்கு
சிப்ஸ் தள்ளிகிட்டிருந்தேன். சும்மா ஒரு வார்த்தை அவன் கிட்ட கேட்போம்னு ரெடி ஆகுறவன் கிட்ட சிப்ஸ்
சாப்பிடுரியானு கேட்டிருந்தேன். வேணாம்னு அவன் சொல்லிட்டான் அப்பறம் என்ன.. மிச்சம் இருக்குற சிப்ஸையும் மொத்தமாக முடிச்சாச்சு..
சரியாக வன்பதரைக்கு ரூம் லாக் செய்து அன்றைய தினம் சுத்தி பார்க்க கீழ இறங்கினோம்.
பிஜெ எங்களுக்கு போட்டு கொடுத்த ஐடினரி படி சனிக்கிழமை ரூம் எடுத்து ஃப்ரெஷப் ஆனதும் எங்களை
முதலில் போக சொன்ன இடம் பிர்லா மந்திர்...
பட்டாயாவில் எல்லாமே 4 நட்சத்திரம் பேருக்குத்தான் 3 நட்சத்திரவிடுதிதான் அதிகம் சகோ![[ ஹாதாரபாட் ஓட்டல் நல்லவசதி போல இருக்கு படம் பார்க்கையில்!
ReplyDeleteஹைதையில் உங்கள் பயணம் ஆரம்பித்து விட்டது. ஓயோ ரூம் - பதிவு செய்கையில் தேனொழுக பேசுவார்கள் - பிறகு இப்படித்தான் நிறைய பிரச்சனைகள் வரும். சில இடங்களில் எங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் உண்டு.
ReplyDeleteஹைதையில் சுற்றிப் பார்த்த இடங்கள் குறித்து அறிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.
பதிவு சின்னதாகவும் சுவையாகவும் இருக்கு.
ReplyDeleteபட்டாயா அணுபவமும் சீக்கிரம் எழுது.